50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கை

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும் தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

முவன்கல மற்றும் உக்சிரிபுர பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்