350 கஞ்சா செடிகளுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

மொனராகலை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பெருமளவான கஞ்சா செடிகளுடன் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் 350 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.