2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இந்த வருடம் பிறந்த முதல் நாளே உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு துயர சம்பவங்களே இடம்பெற்றுள்ளன.
பல நாடுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. சுனாமி எச்சரிக்கையும் பல நாடுகளுக்கு விடுக்கப்பட்டது.
இதேவேளை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் தொடர்மழையால் மக்கள் பல பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு இலங்கை மக்களை பொறுத்தவரையில் வருட தொடக்கமே வரிச்சுமையோடு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பிறக்க முதலே பல்வேறு ஜோதிடர்கள் இந்த ஆண்டை பற்றி பல்வேறுபட்ட கணிப்புகளை சொல்லியிருந்தார்கள்.
அப்படியான ஒரு விடயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம்.
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பாபா வங்கா. பல்கேரியா நாட்டவரான இவரது நிஜப் பெயர் Vangelia Pandeva Gushterova.
இளவரசி டயானாவின் மரணம், Kursk என்னும் ரஷ்ய நீர்மூழ்கி விபத்து, 9/11 தீவிரவாத தாக்குதல்கள், கொவிட் என பல விடயங்களை துல்லியமாக கணித்தவர் பாபா.
2024இலும், உலகத்தலைவர்கள் சிலர் கொல்லப்படுவது, உயிரி ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் என சில பயங்கர விடயங்களை கணித்துள்ளார் பாபா.
2024ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் என கணித்துள்ள பாபா, பெரிய நாடு ஒன்று உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என கணித்துள்ளார்.
2024இல் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என கணித்துள்ள பாபா, அதிகரிக்கும் கடன் மற்றும் புவிசார் பதற்றங்களால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் குழப்பம் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.
ஆண்டு முழுவதும் மோசமடையும் பருவநிலை, பயங்கர இயற்கை பேரழிவுகள், சைபர் தாக்குதல்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள் முதலான விடயங்களும் பாபாவின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் அடங்கும்.
பாபா 2024 குறித்து கணித்துள்ள விடயங்களில் நல்ல விடயங்கள் என்று பார்த்தால், அல்ஸீமர், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு 2024இல் புதிய சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளதும், குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படும் என்பதும்தான்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும்.
மேலும், 2028இல் உலகத்தில் பசி என்பது முடிவுக்கு வந்துவிடும் என்றும், 2076இல் கம்யூனிஸம் மீண்டும் திரும்பும் என்றும் 2304இல் மனிதர்கள் டைம் ட்ராவல் என்னும் விடயத்தை கண்டறிந்துவிடுவார்கள் என்றும் கணித்துள்ளார் பாபா.