புத்தளம் முந்தல் பகுதியிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 2 மாணவர்கள் இன்று செவ்வாய் கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு பாடசாலைகளிலும் எட்டு இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் இருவரும் திருடப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வருடத்தில் இரண்டு தடவைகள் குறித்த இரண்டு பாடசாலைகளிலும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.