மட்டக்களப்பு -காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு -காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி பூங்காவை சுற்றி கோசங்கள் எழுப்பி பேரணி இடம்பெற்றது.

இதன் பின்னர் முள்ளிவாய்க்காக் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பிரதான தீபச்சுடர் ஏற்றி, மலர்மாலை தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் எம்.இஸ்ஸதீனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்