17 வயது சிறுமியை காணவில்லை

17 வயது சிறுமியை காணவில்லை

-யாழ் நிருபர்-

17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி (வயது 17) எனும் சிறுமி நாடகமும் அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்காக பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.