
16 சிறுவர்களை துன்புறுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கிய தமிழரசு கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்