-யாழ் நிருபர்-
தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.
பொலன்னறுவையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87கிலோ பிரிவில் ஜதுசா 103கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளதுடன் 71கிலோ பிரிவில் சிறீவித்தகி 88கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவ்வாறு வெற்றியீட்டி சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.