ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
ஹொரவ்பொத்தான ஒலுகஸ்கடவல பகுதியை சேர்ந்த சமன்சிறி என்ற (வயது – 47) நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி பிரசவித்த குழந்தையின் இரத்தத்தையும் சந்தேக நபரின் இரத்தத்தையும் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைபடுத்தியதையடுத்து சந்தேக நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது முந்தைய திருமணத்தின் மனைவியை கைவிட்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளதுடன் தனது மனைவியின் சகோதரியின் மகளை இரண்டாவது பலாத்காரம் செய்துள்ள நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையின் இரத்த மாதிரிகள் மற்றும் சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்ப முயற்சித்த போது சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.