கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இன்று செவ்வாய் கிழமையும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த சிறுவன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்