ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-லவ்லேன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை நேற்று திங்கட்கழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

லல்லேன் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த சந்தேக நபரை பின் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது, 05 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 2 கிராம் 60 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை லல்லேன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.