வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை வர்த்தகர்கள் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகையுடன், இலங்கை வர்த்தகர்கள் மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஓமானின் மஸ்கட்டில் இருந்து இலங்கையை வந்தடைந்ததாக, விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி எழுபத்தேழு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரம் ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள் மூவரும் ஹலவத்தை மற்றும் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.