வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை, உரிய நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

கணனி அமைப்பின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது மீளமைக்கப்பட்டவுடன் மீண்டும் அறிவிக்கப்படும், எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய தூதரக சேவைகள் எவ்வித தடையுமின்றி பேணப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.