வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டு நபர்

-பதுளை நிருபர்-

பதுளை 3ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் நுழைந்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய பிரஜை ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் சுமார் 19 தடவைகள் இலங்கைக்கு வந்து குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவு பிடிக்காததால் தமது வீட்டுக்கு வரவேண்டாம் என பெண்ணின் பெற்றோர் குறித்த நபரிடம் கூறியதாகவும் அதனை ஏற்றுக் கொள்ளாத சந்தேக நபர் நேற்று குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாக பெண்ணின் பெற்றோர் இனால் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதன் பின்னர் சந்தேக நபரான இந்திய பிரஜை பதுளை பொலிஸாரினால் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்