விவசாய திணைக்கள ஊழியர்கள், விவசாயிகள் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம்

-நுவரெலியா நிருபர்-

விவசாயத்திற்கான உரம், மருந்தினை தடையின்றி வழங்குமாறு கோரியும்,
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை,பொருட்களின் தொடர் விலையேற்றம், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நுவரெலியாவில் விவசாய திணைக்களம் ஊழியர்கள், விவசாயிகள் இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நுவரெலியா நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து நுவரெலியா பிரதான தபால் அலுவலகத்திற்கு முன்பாக பேரணி வருகை தந்து பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.