விலங்குகளுக்கு உணவளிக்க உணவு வகைகளை பயிரிட நடவடிக்கை

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தேசிய மிருகக்காட்சிசாலையில் வாழும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக செலவிடப்படும் தொகை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, அதன் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் குறிப்பிட்ட சில உணவு வகைகளை பயிரிட்டு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.