விமானப்படை வீரரின் மோசமான செயல்

பதில் பொலிஸ் பரிசோதகரை தாக்கியமை தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் கல்கிரியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும் திபுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விமானப்படை வீரருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் பிரதிவாதியாக அழைக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே குறித்த சந்தேகநபர் முறைகேடான முறையில் செயற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரின் மோசமான நடத்தையைத் தவிர்க்க பதில் பொலிஸ் பரிசோதகர் ஆலொசனை வழங்கி கொண்டிருந்த போது அவரின் முகத்தில் பலமுறை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கல்கிரியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்