வாகன விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு சென்ற பேருந்து மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொரி மீது நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்