யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரித் தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள் திருடப்பட்டுள்ளன. மறுநாள் தோட்ட உரிமையாளர் தோட்டத்திற்கு சென்ற வேளையில் கத்திரிச் செடியில் இருந்த கத்திரிக்காய்கள் திருடப்பட்டுள்ளமையை அவதானித்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ,கத்தரிக்காய்களை திருடிய குற்றத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .