தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்புக்கோரியுள்ளார். தேசிய கீத விவகாரம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினையிட்டு மன்னிப்புக்கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்பத்தின் போது தேசிய கீதத்தை பாடிய விதத்தில் தான் கவனம் செலுத்தியதாகவும் பாடகி உமாரா சின்ஹவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நேர்ந்த தவறினால், யார் மனதேனும் காயப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.