மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமல-வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி சந்தியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வான் எல பகுதியில் இருந்து சிறாஜ் நகர் 97ஆம் கட்டைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்த நிலையில் குறித்த பெண் வீழ்ந்து உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் சிராஜ் நகர்- 97 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.பௌவுசியா (44வயது) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை வான்-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.