மொரட்டுவை நகர சபை ஊழியர் கைது

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அலரிமாளிகைக்கு முன்பு கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடினார் மற்றும் பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவருகிறது.