மின்னல் தாக்கி நால்வர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பண்டாரவளை சேவனகம பகுதியில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில் மூவர் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் குடியிருப்பு முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.

நேற்று இரவு பண்டாரவளை சேவனகம  பகுதியில் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் உள்ள வீடு மின்னல் தாக்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.மற்றும் மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளது.

குடியிருப்பில் இருந்த நால்வருக்கு காயங்கள் ஏற்பட்டமையினால் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதில் 5 வயது சிறுவனை சிறு காயங்கள் என்பதினால் மீண்டும் அவருடைய வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

எனினும், 60 வயதான முதியவர் ஒருவர், 58 வயதான மூதாட்டி, 14 வயதான சிறுமியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தற்பொழுதும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரவளை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.