மாடுகளை திருடும் கும்பலின் தலைவர் உட்பட மூவர் கைது

நாடளாவிய ரீதியில் கறவை மாடுகளை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் ஒன்றின் தலைவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலின் தலைவர் மூன்று மாடி வீடொன்றின் உரிமையாளர் எனவும், இவர் அப்பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

நவீன வேன்களை பயன்படுத்தி மாடுகள் திருடப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட மாடுகள் வேனில் வைத்து கொல்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருடப்பட்ட மாடுகளில் இருந்து கறந்த பாலை மக்களுக்கு விற்பனை செய்யும் மோசடியும் இவர் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.