பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து பங்குபற்றி இலட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த மலையக குயில் அசானி இன்றையதினம் கிளிநொச்சியில் கௌரவிக்கப்பட்டார்.
‘மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மலையகம் 200 நிகழ்வின் போதே அசானி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு பொன்னாடை மற்றும் மலர் மாலைகள், பதக்கங்கள் என்பன அசானிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, முருகேசு சந்திரகுமார் மற்றும் வேலுகுமார், வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி சிவஞானம், வை.தவநாதன், உமாசந்திரபிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

