-யாழ் நிருபர்-
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா நேற்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர் சங்கத்தினர் அவரின் சேவையை பாராட்டி கௌரவித்தனர்.
