மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு

மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இன்னும் 12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப்பொருட்கள் நிறைவடையும்.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையின் காரணமாக தற்போது மருந்துப்பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.

சாதாரண மருந்துகளுக்கு கூட 1,500 முதல் 2,000 ரூபா வரையில் அதிகரிக்கும், என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.