கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுடன் மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.