மட்டு.வாகரையில் இடம்பெற்ற மாபெரும் படகு போட்டி

மட்டக்களப்பு-வாகரைப் பிரதேசத்தில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான படகு ஓட்டப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சிவகுரு ஆதின முதல்வர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை க.ஜெகதாஸ், தென்கையிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடியார், தென்கையிலை ஆதின திருமூலர் தம்பிராசா சுவாமி, அருட்தந்தை செ.பிறின்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கிராமத்தின் இளைஞர், யுவதிகள் இப்படகு போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.