-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுக்குட்பட்ட தாழ்நிலப்பகுதிகள், பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது, கடந்த திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
குடியிருப்புக்குள் நீர் புகுந்துள்ளமையினால் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளர்கள், சிலர் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட் புகாமல் மணல் பை கொண்டு தடைகள் ஏற்படுத்துவதனையும் அவதானிக்க முடிந்தது மேலும்
மழை வெள்ளம் காரணமாக வீதிகள் குடியிருப்புக்கள், ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
மூழ்கியுள்ள வீதிகளில் உள்ள வெள்ள நீரினை வடிய வைப்பதற்காக வாய்க்கால் தோண்டும் பணியினை பிரதேச சபை மேற்கொண்டு வருவதுடன், மூழ்கியுள்ள பகுதிகளை பிரதேச சபை செயலாளர் நேரில் சென்றுபார்வையிட்டு வருகின்றார்.



