மட்டக்களப்பில் உயர் தரம் கற்கும் மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மட்டிக்களி பகுதியை சேர்ந்த சுதாகரன் வர்ஷனன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி உயர்தர வகுப்பில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவராவார்.

மாணவனின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.