மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்

மட்டக்களப்பின் பொக்கிஷம் என அழைக்கப்படும் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் இன்று புதன்கிழமை மாலை இறையடி சேர்ந்தார்.

ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆகிய இவர், கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை நடைபெற்று, கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது