போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து, இளைஞனை பொலனறுவை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.