பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் கைது

பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த தவிசாளர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.