பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் முதல் தரப் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.எச் பீரிஸ் , 1965இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியல் துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது முதல் நியமனத்தைப்பெற்ற அவர், 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் , உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் அரசியல் மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிபுணர் ஆவார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு