பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசு உயிரிழந்த துயரம்

பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தை கடந்த 19ஆம் திகதி பிறந்துள்ளது.

குழந்தையும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வீடு வந்தவுடன் குறித்த சிசுவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சிசுவின் தந்தை வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் பெற்றுக்கொள்வதற்கு பல இடங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார்.

எனினும் தாமதமாகவே பெற்றோல் கிடைத்துள்ளது.

அதன் பின்னர், பெற்றோர் குறித்த சிசுவை ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.