-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம் பெற்று வருகின்றது.
இயந்திரம் மூலமான அறுவடை தற்போது அரபா நகர் விவசாய பகுதியில் இடம் பெற்றாலும் அண்மையில் ஏற்பட்ட கனமழை, குளங்களின் வான் கதவுகள் திறப்பு காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நெல்லுக்கான நிர்ணய விலை கிடைக்காமை, வெட்டுக் கூலி அதிகம் என பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ரூபா 15000 வரை ஏக்கருக்கு இயந்திர கூலி செலவாகிறது. விவசாயிகளுக்கு நன்மையான விடயங்களை பெற்றுத் தர வேண்டும் அப்போது தான் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அரசாங்கம் எங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.