புத்தக பைகள் மற்றும் காலணிகளின் விலை அதிரடியாக குறைப்பு

புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே நடந்த பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் இந்த விலை குறைப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் இருக்கும் புத்தக பைகள் மற்றும் காலணிகளின் இருப்புகளை திருத்தப்பட்ட விலையில் வழங்க உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்