காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
பூஸ்ஸ புகையிர நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிர சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிர சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்