பிரதமருக்கு ஆதரவாக நாளை களமிறங்கவுள்ள அணி

பதவியை இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நாளை திங்கட்கிழமை  அலரிமாளிகைக்கு முன்பாக அழைக்கப்பட்டுள்ளனர்.

‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பிரதமருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நாட்டை ஆட்சி செய்ய உரிய திட்டம் இருந்தால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.