கிளிநொச்சியில் ஆண், பெண் என இருவர் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த 68 கிலோ 305 கிராம் கேரளா கஞ்சாவுடன் இவர்கள் இருவரும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபரான பெண்ணின் வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.