பாடசாலை நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டும்

பாடசாலை முடியும் நேரத்தை மாலை 4 மணியாக அதிகரிக்க வேண்டுமென, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மேலதிக நேரத்தை சிறுவர் விளையாட்டுக்காக பயன்படுத்த வேண்டும், என தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், நாட்டில் நிலவும் நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர், என தெரிவித்துள்ளார்.