கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறித்த ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.