பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீடொன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்று, வீட்டுக்குள் புகுந்து ஜன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது, என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.