-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்று இன்று திங்கட்கிழமை காலை தீப்பற்றியுள்ளது.
திருகோணமலை பிரதான வீதியிலுள்ள கே.எம்.டி.வீரசிங்க என்பவருக்கு சொந்தமான சில்லறை கடையே தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
