சீதுவை கிரிந்திகொட பகுதியில் தடுகம்ஓயாவில் பயணப்பையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிந்திகொட பகுதியில் கடந்த 15ஆம் திகதி பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சடலமாக மீட்கப்பட்ட நபர், மாராவில் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கமைய, கட்டானை பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றை நடத்திச் சென்ற நபர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அங்கு பணியாற்றிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி.சி.ரி.வி காணொளி காட்சிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், குறித்த நபரை தமது உணவகத்துக்குள் அழைத்து சென்று தாக்கி கொலை செய்து, சடலத்தை பயணப்பையில் இட்டு தடுகம்ஓயாவில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.