பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்பு : 137 பேர் கைது

பொலிஸாரினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 27,000 லீற்றர் பெற்றோலும், 22,000 லீற்றர் டீசலும், 10,000 லீற்றர் மண்ணெண்ணெயும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான பதுக்கல் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.