படகு சேவைக்கு சீல்

கண்டி ஏரியில் இயங்கி வந்த படகு சேவை நிலையத்திற்கு சீல் வைக்க கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

படகு சேவையின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, அதனை டெண்டர்தாரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் டெண்டர்கள் அழைப்பின் போது அதிக ஏலத்திற்கு புதிய நபர் ஒருவர் அதனை எடுத்துள்ளார்.

இதன்போது 53 வருடங்களாக தொடர்ந்து படகு சேவையை நடத்தி வந்தவர்களுக்கும் புதிதாக டெண்டர் எடுத்தவருக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை நிலவரத்தால், உள்ளக விசாரணை நடத்தப்படும் வரை அந்த இடம் சீல் வைக்கப்பட்டு மூடப்படும் என கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.