நிர்ணயித்த விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டை ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்ய அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட பல சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் துமிஷ்க சுபசிங்க, முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், முட்டை விலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கே முட்டைகளை விற்பனை செய்வதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.