பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டு அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.